விழுப்புரம்: செம்மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்பும் மாவட்டம் வானூர் வட்டம், தலைக்காணி குப்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் செம்மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
கடந்த 2020 -ஆம் ஆண்டு முதல் தங்கள் கிராமத்துக்கு செம்மண் குவாரி தேவையில்லை என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், செம்மன் குவாரி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தலைக்காணி குப்பத்தைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்குப் பதியப்படுள்ளது. எனவே செம்மண் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரியும், 23 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: திமுக நிர்வாகியின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை!
இதையடுத்து காவல் துறையினர், அவர்களை சமாதானம் செய்து, பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோரை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து: பணியாளர் பலி

அஜித்தின் தாயார் உடலுக்கு நாசர் அஞ்சலி!

பாகிஸ்தான் பந்துவீச்சு: ஆஸி. அணியில் அறிமுகமான யு19 வீரர் ஆலிவர் பீக்!

பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்த ஷுப்மன் கில் - சாய் சுதர்சன்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



