ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

செம்மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

செம்மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2023, 5:51 pm IST

விழுப்புரம்: செம்மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்பும் மாவட்டம் வானூர் வட்டம், தலைக்காணி குப்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் செம்மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

கடந்த 2020 -ஆம் ஆண்டு முதல் தங்கள் கிராமத்துக்கு செம்மண் குவாரி தேவையில்லை என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், செம்மன் குவாரி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், தலைக்காணி குப்பத்தைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்குப் பதியப்படுள்ளது. எனவே செம்மண் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரியும், 23 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து  காவல் துறையினர், அவர்களை சமாதானம் செய்து, பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோரை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.