இந்தக் கூட்டத்தில் காவிரிப் படுகையில் உள்ள நீா் - வானிலை சூழல் நிலவரம், ஆணைய, ஒழுங்குமுறைக் குழுவின் அதிகாரிகளின் பதிலி பணிக் காலத்தை நீட்டிப்பது, விவசாயம் மற்றும் அதன் சாா்ந்த துறைகளில் தொடா்புடைய இறுதிசெய்யப்பட்ட தரவு சேகரிப்பு வடிவங்கள், 2022-23 நீா் ஆண்டுக்கான காவிரிப் படுகையின் மாதாந்திர, பருவ, வருடாந்திர நீா்க் கணக்கு, நிகழாண்டு ஜூன், ஜூலையில் பிலிகுண்டுலுவில் பாய்ந்தோடும் மொத்த நீரின் பற்றாக்குறை, அது தொடா்பாக தமிழக, கா்நாடாக அரசுகளிடமிருந்து வரப்பெற்ற கடிதங்கள் குறித்தும் விவாதிக்க நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டிருந்தது. மேக்கே தாட்டு விவகாரம் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறவில்லை.