காரைக்காலில் 77-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா ஏற்றிவைத்தார்.
காரைக்கால் கடற்கரை அருகே சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தேசியக் கொடி ஏற்றி வைத்தார். போலீஸôர், தீயணைப்புத்துறையினர், என்.சி.சி., குடிமையியல் பாதுகாப்பு தன்னார்வலர்கள் கொடி அணிவகுப்பை பார்வையிட்டார். தேசியக்கொடி நிறத்தினாலான பலூன்களையும், சமாதான புறக்களையும் பறக்கவிட்டார்.
புதுவை ரங்கசாமி தலைமையிலான அரசு இதுவரை செய்துள்ள நலத்திட்டங்கள், ஏறக்கெனவே அறிவிப்பு செய்து செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களையும் அவர் விளக்கிப் பேசினார். பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு விழாவில் பரிசுகளை அமைச்சர் வழங்கினார். பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மணிஷ், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் ஏ.சுப்பிரமணியன், நிதின் கௌஹால் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.