அமைச்சா் சிவசங்கா் காலடியில் குழந்தையை வைத்து கோரிக்கை: ஓட்டுநர் தேனிக்கு பணியிட மாற்றம்!
பணி மாறுதல் வழங்கக்கோரி 6 மாத குழந்தையை, அமைச்சர் சிவசங்கர் காலடியில் வைத்து கோரிக்கை வைத்த அரசுப் பேருந்து ஓட்டுநர் கண்ணன் சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.










