மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50 அடி!

கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியதன் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 53.15  அடியிலிருந்து 53.50 அடியாக உயர்ந்தது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை
Updated on
1 min read

கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியதன் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 53.15  அடியிலிருந்து 53.50 அடியாக உயர்ந்தது.

அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 9,394 கன அடியிலிருந்து 9,938 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீா்வரத்தை விட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணை நீா்மட்டம் சரிவிலிருந்து மீண்டு வெள்ளிக்கிழமை காலை 53.15 அடியிலிருந்து 53.50 அடியாக உயர்ந்தது.

அணையின் நீர் இருப்பு 20.08 டி.எம்.சி. ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com