கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியதன் காரணமாக, சனிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50 அடியிலிருந்து 54.19 அடியாக உயர்ந்தது.
அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 9938 கன அடியிலிருந்து 12,523 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர் இருப்பு 20.55 டி.எம்.சி. ஆக உள்ளது.