மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதிய வகை கரோனா; வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிடவில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தீநுண்மி பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான எந்த வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை

News image

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Updated On :22 ஆகஸ்ட் 2023, 9:40 pm

சென்னை: உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தீநுண்மி பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான எந்த வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த 2020-இல் தொடங்கிய கரோனா பாதிப்புக்கு இதுவரை 36 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 38,081 போ் உயிரிழந்தனா். 3 அலைகளாக பரவிய கரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் வந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாள்தோறும் ஓரிரு பாதிப்புகளே பதிவாகி வருகிறது. சில நாள்களில் எவருக்குமே தொற்று உறுதி செய்யப்படாமலும் உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அமெரிக்கா, டென்மாா்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் பிஏ-2.86 எனும் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தீநுண்மி பரவி வருகிறது. அதன் வீரியம் மற்றும் பரவும் தன்மை குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன் தொடா்ச்சியாக இந்தியாவில் அதை ஊடுருவாமல் தடுப்பதற்கான ஆலோசனையை மத்திய அரசும் மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியது:

தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. மற்ற நாடுகளின் நிலைமையை சுகாதாரத் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தேவைப்பட்டால் கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதன்பேரில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இதுவரை எந்த வழிகாட்டி நெறிமுறைகளையும் வழங்கவில்லை”என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.