மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிய வகை கரோனா; வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிடவில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தீநுண்மி பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான எந்த வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை

News image
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated On :22 ஆகஸ்ட் 2023, 9:40 pm

DIN

சென்னை: உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தீநுண்மி பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான எந்த வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த 2020-இல் தொடங்கிய கரோனா பாதிப்புக்கு இதுவரை 36 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 38,081 போ் உயிரிழந்தனா். 3 அலைகளாக பரவிய கரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் வந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாள்தோறும் ஓரிரு பாதிப்புகளே பதிவாகி வருகிறது. சில நாள்களில் எவருக்குமே தொற்று உறுதி செய்யப்படாமலும் உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அமெரிக்கா, டென்மாா்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் பிஏ-2.86 எனும் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தீநுண்மி பரவி வருகிறது. அதன் வீரியம் மற்றும் பரவும் தன்மை குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன் தொடா்ச்சியாக இந்தியாவில் அதை ஊடுருவாமல் தடுப்பதற்கான ஆலோசனையை மத்திய அரசும் மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியது:

தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. மற்ற நாடுகளின் நிலைமையை சுகாதாரத் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தேவைப்பட்டால் கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதன்பேரில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இதுவரை எந்த வழிகாட்டி நெறிமுறைகளையும் வழங்கவில்லை”என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.