திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

முதல்வரிடம் மனு அளித்த ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள்!

தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலத்தில் வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வரிடம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:53 am

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலத்தில் வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வரிடம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.

பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 157 கோடி நிலுவைத் தொகையைப் புதிய ஆலை நிர்வாகம் வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகளின் பெயரில் போலியாக திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கிய சுமார் ரூ. 115 கோடியை தள்ளுபடி செய்து, விவசாயிகளை சிபில் ஸ்கோரிலிருந்து தீர்த்து வைக்க வேண்டும். 

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலை அருகே கரும்பு விவசாயிகள் தொடர்ந்து 268 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வரும் முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டுவது என கரும்பு விவசாயிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக கரும்பு விவசாயிகளிடம் காவல் துறையினரும், வருவாய் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி முதல்வரை சந்தித்து மனு அளிப்பதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். 

இதையடுத்து, கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி போராட்டத்தைக் கைவிட்டு மனு அளிக்க முடிவு செய்தனர்.
 
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டம் வழியாக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வியாழக்கிழமை செல்கிறார். 

இதனிடையே, சாலியமங்கலத்துக்கு பிற்பகல் வந்த தமிழக முதல்வரிடம் கரும்பு விவசாயிகள் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.