களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே சனிக்கிழமை காலை மின்கம்பத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் களக்காட்டைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் பலியாகினர்.
களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் சேதுராயபுரத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் மகன் மந்திரமூர்த்தி (34). அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் செல்லத்துரை மகன் ரகுவரன் (26) உடன் பைக்கில் களக்காட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ரகுவரன் ஓட்டி வந்துள்ளார். பைக் நான்குனேரி தனியார் நூற்பாலை அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த மந்திரமூர்த்தி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ரகுவரன் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். இருவரது உடல்களும் உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விபத்து குறித்து நான்குனேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடும் 4 வீரர்கள்! யார்யார்?
ஐபிஎல்: ஹைதராபாத் அணியில் இருந்து ஜாக் எட்வர்ட்ஸ் விலகல்!

துரந்தர் படத்தின் டீசர், டிரைலரை கட் செய்த ஓஜாஸ் கௌதம் யார் தெரியுமா? யாமி கௌதமின் தம்பி!

வைரலான விடியோ! மெட்ரோ ரயிலில் சப்தமாகப் பாடிய பெண்கள் மீது நடவடிக்கை!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

