பறக்கும் ரயில் சேவை ரத்து: பயணிகள் அவதி

சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4ஆவது வழித்தடம் அமைக்கும் பணிக்காக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவை ரத்து காரணமாக கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், பொதுமக்கள் மிகுந்த சிரமததிற்குள்ளாகினர். 
இதனிடயே மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகள் முற்றுகை காரணமாக ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி-எழும்பூர் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளை திறக்கக் கோரி பயணிகள் இன்று காலை திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பயணிகளின் முற்றுகை காரணமாக 30 நிமிடங்களுக்கு மேலாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com