சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் வளாகத்தில் அயோத்திதாசர் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) திறந்துவைத்தார்.
அயோத்திதாச பண்டிதருக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் வளாகத்தில் ரூ.2.49 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அயோத்திதாசர் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலையையும் திறந்துவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.