செம்பரம்பாக்கம் நீர் திறப்பு: 3,000 கன அடியாக உயர்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி
Published on
Updated on
1 min read

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீா் இருப்பு 20.74 அடியாக உள்ளது. இன்று காலை நீர் திறப்பு 1,500 கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (டிச.3) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்டத்தை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

மேலும், உபரிநீா் வெளியேற்றத்தை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

உபரி நீா் செல்லும் அடையாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com