திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வரலாறு காணாத கனமழை பதிவாகியுள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்து வருகின்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 288 மி.மீ. கனமழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு:
ஆவடி - 280 மி.மீ.
சோழவரம் - 200 மி.மீ.
பொன்னேரி -190 மி.மீ.
செங்குன்றம் - 170 மி.மீ.
தாமரைப்பக்கம் - 170 மி.மீ.
கும்மிடிப்பூண்டி - 150 மி.மீ.
ஊத்துக்கோட்டை - 150 மி.மீ.
திருவள்ளூர் - 150 மி.மீ.
பூந்தமல்லி - 140 மி.மீ.
ஜமீன் கொரட்டூர் - 120 மி.மீ.
திருத்தணி - 120 மி.மீ.
பூண்டி - 120 மி.மீ.
திருவாலங்காடு - 100 மி.மீ.
பள்ளிப்பட்டு - 60 மி.மீ.
ஆர்கே பேட்டை - 40 மி.மீ.