‘அதீத கவனம் தேவை’: சென்னையில் மாலைவரை மழை நீடிக்கும்!

சென்னையில் இன்று மாலைவரை மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
‘அதீத கவனம் தேவை’: சென்னையில் மாலைவரை மழை நீடிக்கும்!

சென்னை: சென்னையில் இன்று மாலைவரை மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால், சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மேலும், பல்வேறு பிரதான சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்த நிலையில், இன்று மாலைவரை மழை நீடிக்கும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் முழுவதும் கனமழை பெய்துள்ளது. புயலின் மேற்கு மேகக் கூட்டங்கள் கடந்த 12 மணிநேரமாக சென்னை மீது உள்ளதால், கனமழை பெய்து வருகின்றது. இந்த மேகக் கூட்டங்கள் மெதுவாக நகர்வதால், மாலை வரை மழை நீடிக்கும். அதீத கவனத்துடன் இருக்கவும். மின்சாரம் உடனடியாக வரும் என்பது உறுதியில்லை. வெளியில் செல்வதை தவிர்க்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.

கனமழைக்கான எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com