தமிழ்நாடு முழுவதும் 3,000 இடங்களில் நாளை(டிச. 9) சிறப்பு மருத்துவ முகாம்!

தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச. 9) 3,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் அமைச்சர்  மா. சுப்பிரமணியன். 
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் அமைச்சர்  மா. சுப்பிரமணியன். 

தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச. 9) 3,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த முகாமினை தொடக்கிவைத்து ஆய்வு மேற்கொள்கிறார். 

இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத் துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கடந்த 23.10.2023 தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாம் 1,000 என்று அறிவிக்கப்பட்டு 2,000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. கடந்த 6 வாரங்களில் இதுவரை 13,234 முகாம்கள் நடைபெற்று அதில் 6,50,585 பேர் பங்கேற்று பயன் பெற்றுள்ளனர். 

தற்போது பருவமழைக் காலமாக உள்ள காரணத்தினால் நாளை (டிச. 9) மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 3,000 இடங்களிலும் அதில் மிக்ஜம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

மேலும் சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கோதாமேடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கிவைத்து ஆய்வு செய்ய உள்ளேன்.

பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தங்களை தற்காத்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், மிக்ஜம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட அடையார் ஆற்றங்கரையோர பகுதிகளான நெருப்புமேடு, ஜோகி தோட்டம், ஜோதியம்மாள் நகர், செட்டித்தோட்டம், விநாயகபுரம், சித்ரா நகர், கோட்டூர்புரம், வாம்பே குடியிருப்பு, அன்னை சத்யா நகர், ரங்கராஜபுரம், சின்னமலை (ஆரோக்யா மாதா குடிசைப்பகுதி) ஆகிய பகுதிகளில் உள்ள 6,000 குடும்பங்களுக்கு வீடு வீடாகச் தேடிச் சென்று 5 கிலோ அரிசி, 1 போர்வை, 1 தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் ஆகிய பொருட்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com