சென்னை: அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை,புறநகா் பகுதிகள் முற்றிலும் மீளாத நிலையில் சென்னையில் 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோயம்புத்தூா், தஞ்சாவூா் உள்பட 15 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.8) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | செங்கல்பட்டு, ஆம்பூர் பகுதியில் லேசான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்
இது குறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத்தூா், நீலகிரி, ஈரோடு,திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை(டிச.8) மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நகரில் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.