சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஆளுநர் மாளிகை அருகே என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு!

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News image
Updated On :9 டிசம்பர் 2023, 3:20 am

DIN

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் கடந்த அக்டோபா் மாதம் 25-ஆம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடா்பாக ரெளடி கருக்கா வினோத் (42) கைது செய்யப்பட்டாா். அவா் மீது கிண்டி போலீஸாா் 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்; 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காகதான் பெட்ரோல் குண்டுகளை வீசினேன் என்று வாக்குமூலம் அளித்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதன் பின்னா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வினோத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கெனவே வினோத் மீது பெட்ரோல் குண்டு வீசிய பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் வேறு பின்னணிகள் இருப்பதாகவும், மத்திய புலனாய்வு அமைப்பு இது தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கருத்துகளை தெரிவித்து வந்தன. அதன்பேரில், இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த மத்திய உள் துறை அமைச்சகம், என்ஐஏவுக்கு உத்தரவிட்டது. அதன்படி, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்களுடன் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சம்பவம் நடந்த அன்று, பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழக ஆயுதப்படை போலீசார் ஒருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.