திரிசூலம் - மீனம்பாக்கம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே செயல்படும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
மின்சார ரயில்கள் தாமதத்தால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.