நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்!

மிக்ஜம் புயல் நிவாரணப் பணியின்போது சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

News image

மிக்ஜம் புயல் நிவாரணப் பணியின்போது சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

Updated On :12 டிசம்பர் 2023, 3:44 pm IST

மிக்ஜம் புயல் நிவாரணப் பணியின்போது சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

தமிழ்நாட்டில் மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்ததால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இன்னும் ஒரு சில பகுதிகளில் மீட்புப்பணி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், மிக்ஜம் புயல் மீட்புப் பணியின்போது சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 3,449 பேருக்கு தலா ரூ. 4,000 ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) வழங்கினார். 

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு தலா ரூ. 4,000 என மொத்தம் ரூ. 1,37,96,000 ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்குமுதல்வர்  ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.