புழல் சிறையில் பெண் கைதி தப்பியோட்டம்: தனிப்படை அமைப்பு

புழல் சிறையில் இருந்து பெண் கைதி ஒருவர் தப்பிச் சென்றார். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர்.
கோவை கார் வெடிப்பு வழக்கு: புழல் சிறைக்கு மாற்றப்படும் 6 பேர்
கோவை கார் வெடிப்பு வழக்கு: புழல் சிறைக்கு மாற்றப்படும் 6 பேர்
Published on
Updated on
1 min read


திருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து பெண் கைதி ஒருவர் தப்பிச் சென்றார். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெங்களூருவை சேர்ந்த கைதி ஜெயந்தி வியாழக்கிழமை தப்பிச் சென்றுள்ளார். 

கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான பணிக்கு பின் கணக்கெடுக்கும்போது கைதி தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பெண் கைதி ஜெயந்தியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து ஒரு தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் சென்றுள்ளனர்.

மற்றொரு தனிப்படை போலீசார் சிறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com