சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நியாயவிலைக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் ஹா் சஹாய் மீனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் வெள்ளம் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியை மேற்கொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) நியாய விலைக் கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.