4 மாவட்டங்களில் டிச.17ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை(டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நியாயவிலைக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் ஹா் சஹாய் மீனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் வெள்ளம் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியை மேற்கொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) நியாய விலைக் கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com