அதிமுக-பாஜக கூட்டணி தமிழக மக்களின் நலனுக்கு எதிரானது என்றாா், திமுக துணைப் பொதுச் செயலரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி.
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரனை ஆதரித்து, பரப்பாடி காமராஜா் சிலை முன் அவா் பேசியது: பெண்கள், மாணவா்-மாணவியா் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும் வகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
தற்போது மத்திய பாஜக அரசு புதிதாக வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள், முதியோா் காப்பகம், ஆதரவற்றோா் இல்லங்களை நடத்திவரும் சிறுபான்மையினருக்கு எதிரானது இச்சட்டம்.
அதிமுக - பாஜக கூட்டணி, மக்களின் நலனுக்கு விரோதமானது. அந்தக் கூட்டணி கரை சேராது. திமுகவின் வாக்குறுதிகள்தான் மக்கள் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கின்றன. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன், திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் ம. கிரகாம்பெல், நான்குனேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஆரோக்கிய எட்வின் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

களக்காட்டில் ‘இண்டி’ கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது அதிமுக-பாஜக கூட்டணி: கனிமொழி எம்.பி.

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்

அதிமுக-பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


