புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்: பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ள ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்.


சென்னை: தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்.
டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களையும், தற்போது நெல்லை உள்பட தென் மாவட்டங்களையும் மழை, வெள்ளம் புரட்டிப்போட்டிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை புது தில்லியில் சந்திக்க நேரம் கோரியுள்ளார்.
இதையும் படிக்க.. தமிழகத்தில் இரண்டு மடங்கானதா கரோனா பாதிப்பு?
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...