சென்னை: தென் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணிநேரத்துக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அடுத்த 24 மணிநேரத்துக்கு அதிகனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.