தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளிடம் கூறியதாவது, தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும். பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட வேண்டாம். அவர் எதிர்கால திட்டம், தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவதுதான்.
ஏற்கெனவே தமிழக மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்தனர். மீண்டும் தோல்வியைத்தான் கொடுப்பாளர்கள். என்றார்
முன்னதாக வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெள்ளத்தைக் கையாள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. தென்மாவட்டங்களை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. நீர்நிலைகளை தூர்வாரவில்லை. இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார்.