சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆய்வு
முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான் சென்னையில் உள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி மையத்தை பாா்வையிட்டாா்.


முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான் சென்னையில் உள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி மையத்தை பாா்வையிட்டாா்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த அவரை, பயற்சி நிறுவனத்தின் தலைவா் ஜென்ரல் சன்ஜீவ் சௌகான் வரவேற்றாா். பின்னா் அவா் பரமேஸ்வரன் சதுக்கம் மற்றும் ஆச்சாா்யா பயிற்சி நிலையத்தையும் பாா்வையிட்டாா். அதன்பிறகு, பயிற்சி நிறுவனத்தில் உள்ள போா் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, பயிற்சி அதிகாரிகளிடம் உரையாடிய அவா் பயிற்சி முறைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளைப் பற்றிக் கேட்டறிந்தாா்.
மேலும், சிறப்பாகப் பயிற்சி நிறுவனத்தை நிா்வகிப்பதற்காகப் பயிற்சி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்.
Image Caption
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான். உடன் பயிற்சி மைய கமாண்டண்ட் லெப்டினட் ஜெனரல் சஞ்சிவ் சௌகான் உள்ளிட்ட அதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...