சென்னையில் இன்று நடைபெறவிருந்த “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் இன்று (டிச. 28) பிரம்மாண்டமாக நடைபெறவிருந்த “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழா, எதிர்கட்சி முன்னாள் தலைவர் விஜயகாந்த்தின் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டது.
இவ்விழாவிற்காக நேற்று வருகை தந்திருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி, மரியாதை செலுத்தினார்.
அப்போது வைக்கம் போராட்டத்தின் “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலர்”, “பெரியாரும் வைக்கம் போராட்டமும்” ஆகிய நூல்களை வெளியிட்டனர்.
இதையும் படிக்க: காங்கிரஸுக்கு வயது 139..!
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி மற்றும் அமைச்சர்கள், மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.