மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகட்டும்! எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மக்கள் அனவைருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மக்கள் அனவைருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.
புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு, எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றி வளர்க்கப்பட்ட அதிமுக மக்களுக்கு துயரம் ஏற்படும் நேரங்களில் எல்லாம் ஓடோடிச் சென்று, அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து பேருதவி செய்து வருவதையும், அதிமுக ஆட்சிக் காலங்கள் தமிழக மக்களுக்கான பொற்காலங்கள் என்பதையும் இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 
மலருகின்ற புத்தாண்டில் மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும் அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில் மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com