47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இரிடியம் முதலீட்டு மோசடி அதிகரிப்பு: டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இரிடியம் முதலீடு மோசடி அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

News image
சைலேந்திர பாபு (கோப்புப் படம்)
Updated On :4 பிப்ரவரி 2023, 7:41 am

DIN



சென்னை: தமிழ்நாட்டில் இரிடியம் முதலீடு மோசடி அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

இரிடியம் முதலீடு என்ற பெயரில் மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றி வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு வெள்ளிக்கிழமை விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், பொதுமக்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.3 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று கூறி கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், சேலம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இதுபோன்ற மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கேரள போலீசார் தமிழகத்தில் உள்ள சக அதிகாரிகளுக்கு ஒரு சில புகார்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற முதலீடுகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், உழைத்து சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சைலேந்திர பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.