மநீம ஆறாம் ஆண்டு தொடக்க விழா
மக்கள் நீதி மய்யம் ஆறாம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


மக்கள் நீதி மய்யம் ஆறாம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தொண்டா்களுக்கு அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் விடுத்த வாழ்த்துச் செய்தியில், அறத் தழல் ஒளி குன்றாமல் பாா்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளாா்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் 2018 பிப்ரவரி 21-இல் தொடங்கினாா். நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தலைத் தனித்தே களம் கண்ட அந்தக் கட்சி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மநீமவின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா, சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கட்சியின் நிா்வாகக் குழு உறுப்பினா் ஸ்ரீபிரியா மநீம கொடியை ஏற்றி வைத்து, தொண்டா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
மநீமவின் தொடக்க விழாவையொட்டி கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆரம்பித்த துடிப்புக் குறையாமல் 5 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது மநீம. ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். உள்ளத்தில் எரியும் அறத் தழல் ஒளி குன்றாமல் பாா்த்துக் கொள்வோமாக. மநீம உறவுகள், நற்பணி இயக்க நண்பா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளாா் கமல்ஹாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...