ஈரோடு கிழக்கு: தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.
ஈரோடு கிழக்கு: தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.

தில்லியிலிருந்து துணைத் தேர்தல் ஆணையர் நடத்தும் கூட்டத்தில் காணொலி வாயிலாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பங்கேற்கிறார். தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உள்ளிட்ட அதிகாரிகளுடன் துணை ஆணையர் அஜய் பாது ஆலோசனை நடத்தவுள்ளார்.

தேர்தல் தொடர்பான புகார்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவைக் குறித்து காணொளி மூலம் இன்று மாலை 5 மணிக்கு துணை ஆணையர் அஜய் பாது ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர், தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பரிசுப் பொருள்கள் விநியோகப்படுவது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com