
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும், முதுநிலை பட்டப் படிப்புக்கான டான்செட் (TANCET) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.ஆர்க் படிப்புகளில் சேருவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தால் தமிழ்நாடு டான்செட் எனும் பொது நுழைவுத் தேர்வு (TANCET) நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே முதுநிலை பட்டப்படிப்புக்கு தகுதியுடையவர்களாக கருதப்படுவர்.
அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் பொறியியல், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் டான்செட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இன்றுடன் அதற்கான விண்ணப்பத் தேதி நிறைவடைய இருந்தது. தற்போது பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.