ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாதுகாப்பு கோரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மனு அளித்துள்ளார். 

News image
Updated On :23 பிப்ரவரி 2023, 11:10 am

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மனு அளித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மற்ற கட்சியினர் பிரசாரம் செய்யும் இடங்களில் சீமான் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சீமான் பேசியது குறித்து 24 மணி நேரத்தில் பதில் அளிக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளார். 

பாதுகாப்பு வழங்கவில்லை எனில் ஹெல்மெட் வழங்கக் கோரி மேனகா மனு அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.