ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மனு அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மற்ற கட்சியினர் பிரசாரம் செய்யும் இடங்களில் சீமான் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சீமான் பேசியது குறித்து 24 மணி நேரத்தில் பதில் அளிக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.
பாதுகாப்பு வழங்கவில்லை எனில் ஹெல்மெட் வழங்கக் கோரி மேனகா மனு அளித்துள்ளார்.
இதையும் படிக்க | நெல் கொள்முதல்: ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு