தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

இபிஎஸ்ஸை அங்கீகரிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் அதிமுக!

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை அதிமுகவினர் இன்று சந்திக்கவுள்ளனர்.

News image
Updated On :24 பிப்ரவரி 2023, 2:49 am

DIN

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை அதிமுகவினர் இன்று சந்திக்கவுள்ளனர்.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வானது செல்லும் என்றும் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் நேற்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியது.

மேலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்தின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தில்லி சென்றுள்ள அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று நேரில் சந்தித்து, அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கோரி மனு அளிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.