அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சென்னை - மதுரை, தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்!

சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

News image
Updated On :24 பிப்ரவரி 2023, 6:14 pm

DIN

சென்னை-மதுரை தேஜஸ் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) முதல் தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் (வண்டி எண்: 22671) பகல் 12.15 மணிக்கு மதுரை சென்றடையும்.

மறுமாா்க்கமாக மதுரையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 22672) இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும். இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.

இந்த நிலையில், தேஜஸ் ரயில் சோதனை அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) முதல் 6 மாத காலத்துக்கு தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே வாரிய இணை இயக்குநா் (இயக்குதல் பிரிவு) விவேக் குமாா் சின்ஹா தெரிவித்துள்ளாா்.

மத்திய அமைச்சா் வரவேற்பு: சித்தலாபாக்கம் வீட்டு உரிமையாளா்கள் சங்கம், பிரதிப் மற்றும் காா்த்திக் அவென்யூ வீட்டு உரிமையாளா்கள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஜன.4-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா்.

இந்த நிலையில், மத்திய அமைச்சா் முருகன் தனது ட்விட்டா் பக்கத்தில், சென்னை வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையின்படி தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும். இதற்கு உத்தரவிட்ட ரயில்வே அமைச்சருக்கு நன்றி என பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.