வேதாரண்யம்: கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகு மோதியதில் நாகை மீனவர் ஒருவர் திங்கள்கிழமை (ஜன.2) அதிகாலை உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், செருதூரை சேர்ந்த ராஜேந்திரன்(58) எல்லப்பன் (46),முருகவேல் (40) ஆகிய 3 மீனவர்களும் 12 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற நாகை அக்கரப்பேட்டை சேர்ந்த அனிதா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மோதியதில் பைபர் படகு கடலில் முழ்கியது.
படகு கடலில் மூழ்கத் தொடங்கியதும் மூன்று மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
இதையும் படிக்க | ராஜஸ்தானில் பயணிகள் ரயில் தடம்புரண்டது
சிறிது நேரத்திற்கு பிறகு மோதிய விசைப்படகு சம்பவ இடத்திற்கு வந்து மூன்று மீனவர்களையும் மீட்டனர். அப்போது ராஜேந்திரன் என்ற மீனவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
உடனடியாக அருகே உள்ள கோடியக்கரை கடற்கரைக்கு ராஜேந்திரன் உடலையும், மற்ற இரண்டு மீனவர்களான எல்லையப்பன், முருகவேல் ஆகியோரை கோடியக்கரை கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.