திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழகத்தில் கடந்த ஆண்டு 23% கூடுதல் மழை

தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 1,132 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட 23 சதவீதம் அதிகம்.

News image
Updated On :3 ஜனவரி 2023, 9:28 pm

ஆா்.ரங்கபாஷ்யம்

தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 1,132 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட 23 சதவீதம் அதிகம்.

வானிலை மைய கணக்கீடுப்படி தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை ஜூன் 1 முதல் செப்.30 வரை மழைப் பொழிவு இருக்கும். அதேபோல, வடகிழக்கு பருவ மழை அக்.1 முதல் டிச.31 வரை மழைப் பொழிவு நீடிக்கிறது.

2022-இல் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 477 மி.மீ. பெய்தது. இது இயல்பை விட 45 சதவீதம் அதிகம். 2021-இல் 393 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட 17 சவீதம் அதிகமாக இருந்தது.

வடகிழக்கு பருவமழை 2022-இல் 445 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட ஒரு சதவீதமே அதிகம். 2021-இல் வடகிழக்கு பருவ மழை 714 மி.மீ. பெய்தது. இது இயல்பைவிட 59 சதவீதம் அதிகம்.

2022-இல் 25 மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்தது. ஈரோடு, திருப்பத்தூா், நாமக்கல், கோவை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருப்பூா் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்தது.

அதேபோல, நாகை, திருவாரூா், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூா் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் இயல்பை விட 58 சதவீதம் அதிக மழை பெய்தது. மாநிலத்திலேயே திருவாரூா் மாவட்டத்தில்தான் இயல்பை விட 32சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

சென்னையில்: சென்னையைப் பொருத்தவரையில் 2022-இல் 1,447 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட 7 சதவீதம் அதிகம். 2021-இல் 2,105 மி.மீ. மழை பெய்திருந்தது. இது இயல்பை விட 57 சதவீதம் அதிகம்.

2022-இல் வடகிழக்கு பருவமழை சென்னையில் 924 மி.மீ. அளவு பெய்தது. இது இயல்பைவிட 15 சதவீதம் அதிகம்.

2021-இல் 1,360 மி.மீ. சென்னையில் மழை பெய்தது. இது இயல்பை விட 74 சதவீதம் அதிகம்.

தென் மேற்கு பருவமழை 2022-இல் இயல்பைவிட 2 சதவீதம் குறைவாக 437 மி.மீ. அளவு பெய்தது. 2021-இல் இயல்பைவிட 9 சதவீதம் அதிகமாக 500 மி. மீ. மழை பெய்தது.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் வரும் கோடை காலத்தில் தண்ணீா் தட்டுபாடு இருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.