தமிழகம் முழுவதும் இன்று இறுதி வாக்காளா் பட்டியல்
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை (ஜன. 5) வெளியிடப்படவுள்ளது.


தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை (ஜன. 5) வெளியிடப்படவுள்ளது. மாநில அளவிலான விவரங்களை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவிக்கவுள்ளாா்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள, வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவ. 9-இல் வெளியிடப்பட்டது. வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்ப்பது, விவரங்களைத் திருத்துவது, நீக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. டிச. 8 வரை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டன. இதன்பின்பு, இறுதி வாக்காளா் பட்டியல் தயாா் செய்யும் பணிகள் கடந்த சில நாள்களாக நடந்தன. பட்டியல் தயாரான நிலையில், இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.
மாநகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் பாா்வைக்காக இறுதி வாக்காளா் பட்டியல் வைக்கப்படவுள்ளது. மேலும், மாநிலம் முழுவதுமான தகவல்களை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு பகிா்ந்து கொள்ளவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...