இரைப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் ஸ்மார்ட் சாதனம்: பெரியார் பல்கலைக்கழகம் சாதனை!

ஸ்மார்ட் சாதனத்தைப் பயன்படுத்தி இரைப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சாதனையை பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை நிகழ்த்தியுள்ளது.
இரைப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் ஸ்மார்ட் சாதனம்: பெரியார் பல்கலைக்கழகம் சாதனை!
Published on
Updated on
2 min read


  
ஸ்மார்ட் சாதனத்தைப் பயன்படுத்தி இரைப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சாதனையை பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை நிகழ்த்தியுள்ளது. இந்த சாதனம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
  
ஊட்டச்சத்து மாற்றம் இந்திய உணவின் கட்டமைப்பில் விரைவான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்திய உணவு சந்தையில் பன்னாட்டு துரித உணவு நிறுவனங்களின் விரைவான பெருக்கம் மற்றும் மேற்கத்திய கலாசாரத்தின் செல்வாக்கு ஆகியவை பாரம்பரிய வீட்டில் சமைத்த உணவுகளை நகர்ப்புற இந்திய வீடுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் மாற்றியுள்ளன, மேலும் இந்தியாவில் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்க பங்களித்துள்ளது குடும்பங்கள். 

பதப்படுத்தப்பட்ட உணவின் அதிகரித்த நுகர்வு வாழ்க்கை முறை நோய்களின் சுமையை அதிகரிக்க காரணமாக இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களைச் சேர்க்காமல் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் கொண்ட உணவைத் தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

பல புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து திறம்பட சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும். மலிவான, ஆக்கிரமிப்பு இல்லாத மற்றும் போதுமான உணர்திறன் மற்றும் குறிப்பிட்ட ஸ்கிரீனிங் முறைகள் இல்லாததால், புற்றுநோயைக் கண்டறிதல் பெரும்பாலும் நோயின் போக்கில் தாமதமாக நிகழ்கிறது. புற்றுநோயை ஆரம்பத்திலயே கண்டறியும்போது அதற்கான சிகிச்சை முறைகள் விரைவில் தொடங்கி நோய் பாதிப்பில் இருந்த மீள முடிகிறது.
 
இரைப்பை புற்றுநோயானது (ஜிசி), இந்தியாவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு இரண்டாவது பொதுவான காரணமாகும். இரைப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் நவீன தொழில்நுட்ப சாதனத்தை பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை கண்டறிந்துள்ளது. துறைத் தலைவர் பேராசிரியர் கே.தங்கவேல் இதற்கான ஆய்வை மேற்கொண்டு சுவாசத்தின் மூலம் இரைப்பை புற்றுநோயை கண்டறியவதற்கான சாதனத்தை உருவாக்கி உள்ளனர். 

இந்த சாதனத்தின் செயல்பாடுகள் பெரியார் பல்கலைக்கழக  துணைவேந்தர் இரா.ஜெகநாதன் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டன.கணினி அறிவியல் துறை தொழில்நுட்ப தொழில்முனைவர் பூங்காவின் தலைமை செயல் அலுவலர் பேராசிரியர் கே.தங்கவேல், திட்ட அலுவலர் எஸ்.சசிகுமார் ஆகியோர் ஸ்மார்ட் சாதனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். 

இதனையடுத்து, துணைவேந்தர் இரா.ஜெகநாதன் தெரிவித்ததாவது:  
பெரியார் பல்கலைக்கழகத்தில் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுவாசத்தின் மூலம் இரைப்பை புற்றுநோயை கண்டறிவது குறித்த ஆய்வு கணினி அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.தங்கவேல் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுடன் நின்றுவிடாமல் கணினி அறிவியல் துறை தொழில்நுட்ப தொழில்முனைவோர் ஆராய்ச்சி பூங்கா வாயிலாக ஸ்மார்ட் சாதனமும் உருவாக்கப்பட்டுள்ளது. புற்றுநோயை மிக எளிமையாக கண்டறியும் வகையில் இந்த ஸ்மார்ட் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த சாதனத்தின் செயல்பாட்டினை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வுக்கூடங்களில் இருந்து மக்களின் பயன்பாட்டிற்கு என்கிற பெரியார் பல்கலைக்கழகத்தின் இலக்கு இதன் மூலம் நிறைவேறியுள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com