நாளை தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. 
நாளை தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை
Updated on
1 min read

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. 

புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் நாளை காலை 10 மணிக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றவுள்ளாா். அதன்பின்பு, பேரவையை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். 

வரும் 11ஆம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கப்பட உள்ளது. ஜனவரி 12 அல்லது 13-ஆம் தேதிக்குள் பேரவைக் கூட்டத் தொடரை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேரவையில் ஆளுநர் ஆற்றும் உரையை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் ஆற்ற இருக்கும் 2வது உரை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com