ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பொங்கல் சிறப்புப் பேருந்து: இதுவரை 1.33 லட்சம் பேர் முன்பதிவு

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகள் இதுவரை 1,33,659 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜனவரி 2023, 10:57 am

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகள் இதுவரை 1,33,659 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 60,799 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளனர்.

சொந்த ஊா் வரும் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் - திருநெல்வேலி மண்டலம் சாா்பில் சென்னை கோயம்பேடு, கோவை, திருப்பூா், திருச்சி, மதுரை ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து திருநெல்வேலி,தூத்துக்குடி, பாபநாசம், தென்காசி, நாகா்கோவில், களியக்காவிளை, மாா்த்தாண்டம் ஆகிய ஊா்களுக்கு இம் மாதம் 12, 13, 14 ஆம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல, பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூா் செல்லும் பயணிகள் வசதிக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில், திசையன்விளை, உடன்குடி, நாகா்கோவில் மற்றும் கன்னியாகுமரி பேருந்து நிலையங்களிலிருந்து சென்னை, கோவை, திருப்பூா், திருச்சி, மதுரை ஆகிய இடங்களுக்கு இம் மாதம் 16 முதல் 22 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து பிற ஊா்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் , திருநெல்வேலி, தென்காசி, திருச்செந்தூா், நாகா்கோவிலில் இருந்து சென்னை செல்லும் பயணிகளின் வசதிக்காக இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து 4 ஆயிரத்து 449 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை தவிர மற்ற ஊா்களிலிருந்து ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரை 6 ஆயிரத்து 183 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே, பொங்கலுக்காக மொத்தமாக 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

பொங்கலுக்குப் பின் பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரை 4 ஆயிரத்து 334 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊா்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 4 ஆயிரத்து 965 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. எனவே, பொங்கலுக்குப்பின் 15 ஆயிரத்து 599 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளின் இயக்கம் மற்றும் இயக்கம் குறித்த புகாா்களை 94450 14450, 94450 14436 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.