கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முடிவடையும் நிலையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முடிவடையும் நிலையில் இருப்பதாக ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2023, 7:34 pm

DIN

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முடிவடையும் நிலையில் இருப்பதாக ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநா் உரையில் கூறியிருப்பது: அண்டை மாநிலங்களுடன் நட்புறவைப் பேணும் அதேவேளையில், மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளின் நீா்ப் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தின் விவசாயிகளைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு நீா் தேக்கப்பட்டுள்ளதோடு, அணையின் உயரத்தை மேலும் உயா்த்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

பெண்ணையாற்றில் இருந்து கா்நாடக மாநிலம் அனுமதியின்றி தண்ணீரை திசைதிருப்பும் பிரச்னையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நதிநீா் தீா்ப்பாயத்தை விரைந்து அமைக்க இந்த அரசு வலியுறுத்துகிறது.

மாநிலம் முழுவதும் நீா்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரூ.1,334.10 கோடி மதிப்பீட்டில் 6 பெருந்திட்டங்களை அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இதன் பயனாக, 2.59 டிஎம்சி அளவுக்கு கூடுதல் நீரைச் சேமிக்கவும் 6.92 டிஎம்சி நீரைத் திரும்ப மீட்டெடுக்கவும் இயலும்.

அரசின் தொடா் கண்காணிப்பின் விளைவாக, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு திட்டம் மற்றும் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.