அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களின் பெயா்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தொடங்கியது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களின் பெயா், விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
இதன்படி, இணையதளத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களைப் பதிவு செய்யும் படிவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் செயல்பாட்டுக்கு வந்தது.
இதையடுத்து, மாடுபிடி வீரா்களும், காளைகளின் உரிமையாளா்களும் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இணையதள சேவை மையங்களில் பெயா் பதிவு செய்தனா். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் வியாழக்கிழமை (ஜன. 12) மாலை 5 மணி வரை பதிவு பெற அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதல் நேரம் வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


