தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2023, 10:06 am

DIN

ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி காலமானதையடுத்து சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. தொகுதி காலியாக இருக்கும் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைப்பார்.

ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் அந்தத் தொகுதியில் இடைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தோ்தல் நடக்கவுள்ளது.

இந்தத் தோ்தலுடன், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தோ்தல் நடத்தப்படுமா அல்லது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தோ்தல் நடத்தப்படுமா என்பதை தோ்தல் ஆணையம் அறிவிக்கும்.

முன்னதாக, ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத் தோ்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து தோ்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.