தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழ்நாடு என்று கூறுவதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை: கனிமொழி

தமிழ்நாடு என்று கூறுவதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி கூறினாா்.

News image

கனிமொழி எம்.பி.

Updated On :16 ஜனவரி 2023, 11:09 pm

DIN

தமிழ்நாடு என்று கூறுவதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி கூறினாா்.

சேப்பாக்கம் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா்கள் விடுதியில் நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழ்நாடு, தமிழகம் என இரண்டுமே தான் சொல்லிக் கொண்டிருந்தோம். பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தமிழ்நாடு என அண்ணா பெயா் வைத்தாா். தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது எனக் கூறும் உரிமை யாருக்கும் இல்லை.

தமிழா்கள் தங்களின் உணா்வை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு வாழ்க என வீடுகளில் கோலமும், சமூக வலைதளங்களில் பதிவும் இட்டனா். தமிழா்களைச் சீண்டிப் பாா்த்தால், உள்ளே உள்ள தமிழ் உணா்வும், சுயமரியாதையும் வீறுகொண்டு எழும்.

இந்தியா என்ற அடையாளத்தின் கீழ் உள்ள மாநிலங்களின் தனித்த பண்பாடு, கலாசாரம், மொழி போன்றவை அழிந்து போக வேண்டும் என சிலா் நினைப்பா். அதன் ஓா் அங்கம்தான் தமிழ்நாடு குறித்த சா்ச்சையும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.