எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூத்துக்குடியில் மாட்டுவண்டி போட்டி!

தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடி கிராமத்தில் வ.உ.சி. நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி இன்று நடைபெற்றது.

News image
Updated On :17 ஜனவரி 2023, 6:51 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடி கிராமத்தில் வ.உ.சி. நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் இன்று நடைபெற்றது. இப்போட்டி பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டுவண்டி, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது.

Story image

இதில் நெல்லை, தூத்துக்குடி மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பெரியமாட்டுவண்டி பிரிவில் 11 மாட்டுவண்டிகளும், சிறிய மாட்டுவண்டிப் பிரிவில் 16 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பிரிவில் 32 வண்டிகள் என மொத்தம் 59 மாட்டு வண்டிகளும், 118 காளைகளும் போட்டியில் கலந்துகொண்டன. 

Story image

செக்காரக்குடி கிராமத்திலிருந்து பொட்டலூரணி வரையிலான சாலையில் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டுவண்டிக்கு 14 கி.மீ தூரமும், சிறிய மாட்டுவண்டிகளுக்கு 10 கி.மீ தூரமும், பூஞ்சிட்டு மாட்டுவண்டிக்கு 8 கி.மீ தூரமும் போட்டிக்கான எல்லையாக அறிவிக்கப்பட்டது. பந்தயம் தொடங்குவதற்கு முன்னர், விவசாயிகள் தங்கள் காளைகளை வண்டியில் பூட்டி, கற்பூர ஆரத்தி காட்டி உற்சாகப்படுத்தினர். போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Story image

இந்த போட்டிகளை ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.