கம்பம்: தேனி மாவட்டம், குள்ளபுரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி 4 -ஆம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ஒரு பாகமாக அனுமந்தன்பட்டியில் மலர் சாகுபடியில் உள்ள விவசாயிகளுக்கு ரோஜா பூவின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் விவசாயிகளிடம் கூறியதாவது, ரோஜா பூவை செடியிலிருந்து பறித்து அதனை சேமித்து விற்பனைக்கு அனுப்பும் முன்பே அவை வாடிவிடுகின்றன. இதனால் பூக்களின் விலை குறைக்கப்பட்டு குறுகிய லாபத்தை மட்டுமே ஈட்ட முடியும். எனவே, ரோஜா பூக்களை செடியில் இருந்து பறித்த உடனேயே அதனை 3 முதல் 5 சதவீதம் அளவுள்ள சர்க்கரை கலந்த நீரில் பூவின் காம்பு படும்படி வைக்கவும். இதனால் பூக்களின் வாடல் குறையும். அதனை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறினர்.
செயல் விளக்கத்தினை கம்பம் குழு மாணவர்களான சக்திவேல், காளிராஜன், ஆல்பின் சாபு, நந்தகுமார், மோகன், சிவனேசன், மணி கிருக்ஷ்ணா, மூவேந்திரன், ராஜா, விஜய் ஆனந்த், ஸ்ரீ கோகுல், மற்றும் கார்த்திகேயன் விளக்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

EPS தலைமையில் ஆட்சி! பியூஸ் கோயல் பேட்டி! | ADMK | NDA

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பவர்கிரிட் நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி!
புரோ கோட் பெயரை மாற்றும் ரவி மோகன்!

எல்பிஜி தட்டுப்பாடு: கேஸ் சிலிண்டரை சிக்கனமாகப் பயன்படுத்த 10 டிப்ஸ்!
வீடியோக்கள்

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

