ஈரோடு: ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடைபெற்ற 74 ஆவது குடியரசு நாள் விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மூவர்ணக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காவல் துறை, மருத்துவம், வேளாண்மை, பள்ளிக்கல்வி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட துறைகளில் சாதனை புரிந்த 400க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
இதையும் படிக்க | நாகையில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!
இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வழக்கமாக குடியரசு நாள் விழாவில் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
ஆனால், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த ஆண்டு குடியரசு நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.