சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சேலத்தில் வீட்டு உபயோக பொருள்கள் குடோனில் தீ: பொருட்கள் எரிந்து நாசம்

வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை கடை குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 3:08 am

DIN

சேலம்: வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை கடை குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ அதிகம் பரவியதால் அருகில் வசித்த பொதுமக்கள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் டவுன் பகுதியில் உள்ளது முதல் அக்ரஹாரம் பகுதியில் மீனாட்சி மற்றும் மீனாட்சி என்ற தனியார் வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது இரண்டாவது மாடியில் குடோனில் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட  வீட்டு உபயோக பொருள்கள் அடிக்கி வைக்கப்பட்டு உள்ளது. இன்று இரவு சுமார் 7 மணி கரும்பு கை ஏற்பட்டு தீ பிடித்தது 
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் கடையின் உரிமையாளர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ கொழுந்து விட்டு எரிந்ததால் குடோன் பின்புறம் பகுதிகளிலும் தீயில் வெப்பம் அதிகரித்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் வீடுகளில் ஏறி தீயை அணைத்தனர்.

தீ கொழுந்து விட்டு தொடர்ந்து எரிந்து வந்ததால் கட்டுக்குள் கொண்டு வர மேலும் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்து குறித்து டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

குடோனில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து இருக்கலாம் என தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்கு உபயோகப் பொருள்கள் வைக்கும் குடோனின் ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.