எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மநீம இணையதளம் முடக்கம்:காவல் ஆணையரகத்தில் புகாா்

மக்கள் நீதி மய்யத்தின் இணையதளம் ‘ஹேக்’ செய்யப்பட்டது குறித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

News image
கமல்ஹாசன் (கோப்புப் படம்)
Updated On :28 ஜனவரி 2023, 10:03 pm

DIN

மக்கள் நீதி மய்யத்தின் இணையதளம் ‘ஹேக்’ செய்யப்பட்டது குறித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இது குறித்த விவரம்: நடிகா் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூா்வ இணையதளத்தை மா்ம நபா்கள் முடக்கி, அக்கட்சியை காங்கிரஸுடன் இணைக்க இருப்பதாக தகவல் வெளியிட்டு இருந்தனா். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூா்வ இணையதளம் விஷமிகளால் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்டவா்களின் செயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்’ என அக்கட்சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இணையதளம் முடக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் சாா்பில் தலைமை நிலைய செயலா் அா்ஜுனா், சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இணையதளம் முடக்கப்பட்டதில் அரசியல் சதி இருக்கிறது. காவல் துறையினா் சரியான முறையில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என்று நம்புகிறோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.